Saturday, January 30, 2010

ஒரு படம்: ஒரு பாடம் - உலகம் இனி வேறு வழிகளை யோசிக்க வேண்டும்

2010 ஆம் ஆண்டுக்கான சிறிலங்காவின் குடியரசு அதிபர் தேர்தல், ஜனவரி 26 அன்று நடந்து முடிந்துவி்ட்டது.

போட்டியில் பலர் இருந்தனர்: ஆனால், முன்னணியில் இருவரே ஓடினர்.

இருவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்: இனவாத அரசியலையே முன்னிறுத்தியவர்கள்.

இருவரும்
ஒருவரோடு ஒருவர் பகைத்துக்கொண்டதால் - அதிகாரத்தில் இருந்த இனவாதியை
நிராகரிப்பதற்காக, அதிகாரத்தை இழந்திருந்த இனவாதியை ஆதரிக்கத் தமிழினம்
முடிவெடுத்தது.

இலங்கை வரைபடத்தில் இந்த இருவரும் வெற்றி பெற்ற
மாவட்டங்களுக்கு வெவ்வேறு வண்ணம் தீட்டினால் - அது ஒரு வரலாற்றுச்
செய்தியைச் சொல்லுகின்றது.


இலங்கைத் தீவு இரண்டாகப் பிளவுபட்டுக் கிடக்கின்றது என்பது தான் அது.

சிங்களப் பகுதியில் ஏகப் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளவர் தமிழ் பேசும் பகுதிகளில் மட்டுமே தெளிவாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்
பேசும் மக்களின் ஆதரவைப் பெற்றவர், அவரே ஒரு இனவாதியாக இருந்தும் கூட,
சிங்களப் பகுதியில் ஒரு மாவட்டத்தை கூட வெல்ல முடியவில்லை.

இந்தச் செய்தி இங்கு இலங்கைத் தீவின் அரசியல் அரங்கில் முக்கியமானது.

தேர்தலைப் புறக்கணிப்பதை விடவும் வாக்குச் சீட்டை ஒர் ஆயுதமாக பயன்படுத்திய தமிழ் பேசும் மக்கள், இனவாதத்தை நிராகரித்துள்ளார்கள்.

தமிழ்
பேசும் மக்கள் சுதந்திரமாக வாக்களித்துவிடக் கூடாதென மேற்கொள்ளப்பட்ட
பல்வேறு நிர்பந்தங்களைத் தாண்டித் தான் அவர்கள் வாக்களித்தார்கள்; தங்கள்
மன நிலையை இவ்வாறு ஒரு வரலாற்று வரைபடம் ஆக்கினார்கள்.

கடந்த அரச
அதிபர் தேர்தலில் - தமிழ் பேசும் மக்களின் ஐனநாயக உரிமையைத் தடு்த்தவர்கள்
தமிழீழ விடுதலைப் புலிகள் தான் என கருத்துரைத்த அனைத்துலக சமூகம்
கவனத்தில் கொள்ள வேண்டிய இடம் இது தான்.

தமிழ் பேசும் மக்களின்
பிரதிநிதிகள் தங்களின் தேர்தல் கூட்டை அறிவித்த போதே, பேரினவாதம் திரண்டு
அடுத்த பக்கமாகச் சாயும் என்பது எளிமையான வாய்ப்பாடாகும்.
ஜனநாயகம் பற்றிப் போதிக்கும் அனைத்துலக சமூகம், மாறவே மாட்டாத
சிறிலங்காவின் "ஐனநாயகம்" பற்றிப் பாடம் படிக்க இதனை விடவும் வேறு ஒரு
சிறந்த உதாரணம் இருக்க முடியுமா?

வெற்றி பெற்றவர் வாக்கு
மோசடிகளைச் செய்தோ, இராணுவ பலத்தைப் பயன்படுத்தியோ, முறைகேடாக நடந்தோ
வெற்றி பெற்றார் என்ற குற்றச்சாட்டுகள் ஒரு புறம் இருந்தாலும் - வெற்றிக்
கோட்டினை வரைந்தது பேரினவாதம் தான்.

இந்த பேரினவாதம் - இலங்கைத்
தீவின் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக மட்டுமல்ல, இந்தியா மற்றும்
பன்னாட்டுச் சமூகத்தின் விருப்பிற்கு எதிராகவும் இந்த ஆணையை அளித்துள்ளது
என்பது தான் இங்கே உள்ள பெரிய செய்தி.

இது - அனைத்துலக சமூகத்திற்கு, தமிழ் பேசும் மக்கள் மக்களின் அரசியல் வேட்கையின் நியாயத்தையும் தெளிவாகக் காட்டுகிறது.

அனைத்துலக
சமூகம் இதில் அறிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் - 77 வீத ஒரே இனப்
பெரும்பான்மை கொண்ட, தனது நாட்டுப் படைகளி்ல் 99 வீதம் அதே இனத்து
ஆட்ளைக் கொண்ட சிறிலங்கா போன்ற போன்ற நாடுகளில் ஐனநாயகம் என்பது
செல்லுபடியற்றது என்பதைத் தான்.

இடம்பெறப் போகும் நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே பேரினவாத ஐனநாயகம் தான் வெல்லப் போகின்றது.

அறுபத்தி இரண்டு ஆண்டு கால வரலாறும் இது தான்.

அடிப்படையில்
- இலங்கைத் தீவு, இயல்பாக - இயற்கையாக - இரண்டாகவே பிளந்து கிடக்கின்றது;
ஆனால், பலவந்தமாக - செயற்கையாக - ஒன்றுபடுத்தப்பட்டு உள்ளது.

ஒரு
நீண்ட கால நோக்கில் அது எவருக்குமே - தமிழர்களுக்கோ, சிங்களவர்களுக்கோ,
இந்தியாவுக்கோ, அனைத்துலக சமூகத்திற்கோ - நன்மை பயக்காது.

தேர்தலில்
வெற்றி பெற்ற பின்னர் பேசிய மகிந்த ராஜபக்ச - தனக்கு மக்கள் அளித்துள்ள
இந்த மிகப் பெரிய ஆணை தான், தமது அரசு மீது போர்க் குற்ற விசாரணை
நடத்தப்பட வேண்டும் என்று சொல்வோருக்கான பதில் என்று சொல்லியுள்ளார்.

அதாவது
- ஜனநாயகத்தின் அடிப்படைகளுக்கு எதிராக அதே ஜனநாயகத்தைப் பாவிப்பதற்கான
அதிகாரத்தையே சிறிலங்காவில் ஜனநாயகம் ஒரு பேரினவாதிக்கு வழங்குகின்றது.
அதனால் - இலங்கைத் தீவில் அமைதியை ஏற்படுத்த வேண்டுமெனில் - அதன் மீது
செல்வாக்குச் செலுத்த வேண்டுமெனில் - அதனைத் தங்கள் கையிற்குள்
வைத்திருக்க வேண்டுமெனில் - தேர்தல் ஐனநாயக வழிமுறைக்கு மாற்றாக வேறு
வழிமுறைளைக் கையாள்வது பற்றி உலக சமூகம் யோசிக்க வேண்டும்.

அவ்வளவு தான்.

என் அருமைத் தமிழ் மக்களுக்கு,

என் அருமைத் தமிழ் மக்களுக்கு,


முத்துக்குமார் எழுதுவது,


நலம், நலம் அறிய ஆவல் என்று என்னால் எழுத
முடியாது. ஏனென்றால் நான் இறந்துபோய் விட்டேன். எனக்கு வயது 29, சினிமா
உதவி இயக்குனராகவும், பத்திரிக்கையாளனாகவும் பணியாற்றினேன்.
திருமணமாகவில்லை. அம்மா இல்லை, அப்பா திருமணமான சகோதரி உண்டு.


கடந்த ஜன-29 (2009) அன்று
உங்களுக்கெல்லாம் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு எனது உயிரை
அழித்துக்கொண்டேன். எனது கடிதம் உங்களுக்கெல்லாம் கிடைத்ததா? நான் செய்தது
தற்கொலை அல்ல. தீர்க்க முடியாத கடனாலோ, தீராத நோயினாலோ, காதல் பிரிவின்
துயரத்தாலோ நான் என்னை அழித்துக்கொள்ளவில்லை. உங்களை விழிக்க வைக்கவே
என்னை அழிக்க நினைத்தேன்.


சினிமா பார்க்கவும் டி.வி.பார்க்கவும்,
கிரிக்கெட் பார்க்கவும் அன்றாட வேலைகளை பார்க்கவும் நீங்கள் விழித்தேதான்
இருக்கிறீர்கள். இருந்தும் நீங்கள் விழிக்காமல் போனது சகமக்களின்
துன்பங்களை பார்க்க என எண்ணுகிறேன். நமக்கு உணவளிக்கும் காவேரி,
முல்லைப்பெரியாறு விவசாயிகளின் துன்பங்களை எண்ணிப்பார்க்க
மறந்திருக்கிறோம். நமக்காக மீன்பிடிக்கச் சென்று சிங்கள இராணுவத்தால்
சுட்டுக் கொல்லப்பட்ட 500 மீனவர்களின் வாழ்வை எண்ணிப்பார்க்க
மறந்திருக்கிறோம்.


இந்த வழக்கத்தில்தான் காப்பற்றச் சொல்லி
நம்மை நோக்கி கத்திக் கதறினார்களே பெண்களும், குழந்தைகளும்,
முதியவர்களுமாய் தமிழீழ மக்கள், அந்த மக்களின் துன்பங்களைக்கூட
ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இந்நிலையில் தான் நான் என் உயிரை தீயிட்டு
அழித்தேன். யார் இவன்? எதற்காக உயிரை அழித்துக்கொண்டான்? என்று உங்கள்
கவனம் என் பக்கம் திரும்பும், அப்படியாவது உங்கள் கவனம் ஈழமக்கள் பக்கம்
திரும்ப வேண்டும் என்பதே எனது மரணத்தின் நோக்கம்.


செய்தியறிந்த மாணவர்கள், இளைஞர்கள்
ஈழத்தின் பக்கம் திரும்பினார்கள். எனது மரணத்தின் செய்தி உங்கள்
அனைவருக்கும் சேரா வண்ணம் அரசியல் இலாபங்களுக்காக பலர் அதை
மட்டுப்படுத்தினார்கள். எனக்குப் பிறகு 18 பேர் தீக்குளித்து மாண்டார்கள்.
தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 14 பேர். அதன் பிறகும் உங்கள் கவனம்
ஈழமக்கள் பக்கம் திரும்பாததால் கடைசியில் எல்லோரும் பயந்தபடியே
ஐம்பதாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டே விட்டார்கள்.


போர் தான் முடிந்ததே, விட்டார்களா என்ன?.
போரில் மிஞ்சிய பொதுமக்கள் 3.5 இலட்சம் பேரையும் கைது செய்தார்கள்.
அத்தனைபேருக்கும் முள்வேலியால் பிரம்மாண்ட சிறை செய்தார்கள். பெயருக்கு
பதிலாக அனைவருக்கும் நம்பர் போட்டு இழிவுபடுத்தினார்கள்.
இளைஞர்களையெல்லாம் கொல்லக் கூப்பிட்டுப் போய்விட்டார்கள். உச்சக்கட்ட
பட்டினி போட்டு தமிழ் பெண்களின் உடலை சோற்றுக்கு விலைபேசி விட்டார்கள்.
போரின் இறுதி 48 மணி நேரத்தில் 20 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.


இச்செய்தியைக் கூட ஈழத்தில் இருந்து 10
மைல் தொலைவிலுள்ள தமிழக தொலைக்காட்சிகளோ, செய்தித்தாள்களோ வெளியிடவில்லை.
பல ஆயிரம் மைல் தள்ளியிருக்கும் டைம்ஸ் என்ற உலக புகழ்பெற்ற ஆங்கில இதழ்
வெளியிட்டது. இந்த நேரங்களிலும் கூட நமது தொலைக்காட்சிகள் சிரி சிரி,
சிரிப்பொலி, சிரிப்பு வருது.... என்றெல்லாம் காட்டி நம்மை சிரியாய்
சிரிக்க வைக்கிறார்கள். அந்த பக்கம் மனிதநேயம் நம்மைப் பார்த்து சிரியாய்
சிரிக்கிறது.


விவரம் அறிந்த ஐரோப்பிய இனத்தவர்கள்
கேட்கிறார்கள். 6.5 கோடி தமிழர்கள் பக்கத்தில் என்ன செய்து
கொண்டிருக்கிறார்கள் என்று. அவர்களுக்கு எப்படித்தெரியும்.! நாமெல்லாம்
தமிழ்த் தாயால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் அல்ல, சன்டிவியின் தமிழ்மாலையால்
வளர்க்கப்பட்ட பிள்ளைகள் என்பது! என் அருமைத் தமிழ் மக்களே, என்ன செய்தால்
நீங்கள் ஈழமக்கள் பக்கம் திரும்புவீர்கள் என எனக்கு தெரியவில்லை. மீண்டும்
எனது உயிரை மாய்த்து உங்களுக்கு செய்தி சொல்ல என்னிடம் இன்னொரு உயிர்
இல்லை. விழியுங்கள், இப்போதாவது விழியுங்கள், ஈழமக்களின் வேதனைகளை
ஏறெடுத்துப்பாருங்கள்.


பெற்றோரை இழந்த குழந்தைகள், குழந்தைகளை
இழந்த பெற்றோர்கள் ஆயிரம் ஆயிரமாய்; கணவரை இழந்த மனைவியர், மனைவியரை இழந்த
கணவர்கள் ஆயிரம் ஆயிரமாய்; உயிரோடு இருந்தும் கை, கால்கள், கண் என
உடலுறுப்புகள் பல இழந்து நடைபிணமாய் வாழ்பவர்கள் ஆயிரம் ஆயிரமாய்; போதும்
இத்தோடு எல்லாம் போதும், கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையை இரண்டு
இலட்சத்தோடாவது தடுத்து நிறுத்துவோம்.


என்ன செய்யலாம் இதற்காக? ஒன்றே ஒன்று
செய்வோம் இதற்காக, நாம் அன்றாடம் பல செய்திகளை முணுமுணுப்பது போல
ஈழமக்களுக்காக நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்திலும் மற்றவர்களிடம்
முணுமுணுப்போம். அது போதும் 6.5 கோடி மக்களின் முணுமுணுப்பு என்பது
பேரிரைச்சல் அல்லவா? இப்பேரிரைச்சல் ஈழ விடுதலையை உலகின் செவிகளில் ஓங்கி
ஒலித்துவிடும். உங்களுக்காக உயிர் கொடுத்தவன் என்ற உரிமையில் உங்கள்
உணர்வுகளை நான் புண்படுத்தி எழுதியிருந்தால் என்னை மன்னிக்கவும்.


இப்படிக்கு

இறந்தும் உங்களுடன் வாழும்


முத்துக்குமார்

Tuesday, January 26, 2010

கூகிள் மின்னஞ்சலில் கவனிக்கப்படாதவை!

குறுகிய காலத்தில் பல மில்லியன் மக்களை தன் பக்கம் இழுத்ததில் கூகிள்க்கு நிகர் கூகிள் தான், எளிமை, வேகம், புதுமை, பாதுகாப்பு இதுவே இதன் தாரக மந்திரம். ஏதாவது ஒன்றை கண்டு பிடித்தால் அதோடு நிறுத்திவிடாமல் மேலும் மேலும் அதில் புதிய உத்திகளை புகுத்துவது மாற்றம் செய்வது என்று அதன் ஆர்வம் சற்றும் குறையாமல் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. கூகிள் அளவிற்கு பயனாளர்களுக்கு வசதியை செய்து கொடுப்பது போல வேறு எந்த நிறுவனமும் இல்லை.

மற்ற மின்னஞ்சல் (Yahoo!, Hotmail) நிறுவனங்களில் இருந்து தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை தற்போது பலர் கூகிள் க்கு மாற்றி விட்டார்கள், என் நண்பர்கள் தற்போது 90% கூகிள் தான் (நான் இன்னும் யாஹூ வில் தான் உள்ளேன், மாற்ற இப்போதைக்கு விருப்பமில்லை). தனது மின்னஞ்சல் சேவையில் பல வசதிகளை வெளிப்படையாகவும் பல வசதிகளை வேண்டும் என்றால் பயன்படுத்திக்கொள்ளும் படியும் அமைத்துள்ளது, இதை ஆய்வுகூடமாக (Lab) கூறுகிறது. இதில் பல பயனுள்ள விஷயங்கள் உள்ளது, இதை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். பலர் இது பற்றி ஏற்கனவே தெரிந்து இருப்பீர்கள், இது தெரியாத அல்லது கவனிக்காதவர்களுக்கு!

இதை நீங்கள் கூகிள் மின்னஞ்சலில் Settings ஐ சொடுக்கினால் அதில் Labs என்று இருக்கும், அதில் சென்று உங்களுக்கு தேவையானவற்றை நீங்கள் இணைத்துக்கொள்ளுங்கள், அதில் சில முக்கியமானவை பற்றி நான் கூறுகிறேன்.


Inserting images: இதன் பயன் என்னவென்றால் படங்களை நமது விருப்பப்படி மின்னஞ்சல் அனுப்பும் போது அமைத்துக்கொள்ளலாம். எடுத்துக்காட்டாக பார்வர்ட் மின்னஞ்சல்களுக்கு மிகவும் பயன் தரும். படத்தை பற்றி விளக்கம் பிறகு படம், இதே போல விளக்கங்கள் கூறி படங்களை இணைக்கலாம், இல்லை என்றால் மொத்த படங்களும் இடைவெளியில்லாமல் வரிசையாக இருக்கும் அதன் விளக்கங்கள் எதற்கு என்று தெரியாமல் அணிவகுத்து இருக்கும்.



Default 'Reply to all': ஒரு சிலர் குழுவாக (தனி குழும மின்னஞ்சல் இல்லாமல்) அடிக்கடி தனது நண்பர்களுக்குள் மின்னஞ்சல் செய்பவர்களாக இருப்பார்கள், அவர்களுக்கு இதை இணைத்தால் Reply to all என்பது வலது ஓரத்தில் மேலே வந்து விடும் (வழக்கமாக இருக்கும் Reply யும் இருக்கும்) இதனால் எளிதாக அனைவருக்கும் அனுப்பலாம்.



Hide Unread Counts: முன்பு தான் ஆடிக்கு ஒருநாள் அம்மாவாசைக்கு ஒரு நாள் மின்னஞ்சல் வரும், தற்போதெல்லாம் நண்பர்கள் மின்னஞ்சல், குழும மின்னஞ்சல், பல தளங்களில் சப்க்ரைப் செய்து இருந்தால் அந்த மின்னஞ்சல்கள் என ஏகப்பட்டது வருகிறது. இது எத்தனை வந்துள்ளது என்ற எண்ணிக்கை Inbox ல் தெரியும், இது உறுத்தலாக தெரிந்தால் இந்த எண்ணிக்கையை இதை இணைப்பதின் மூலம் மறைக்கலாம்.



Right-side chat : கூகிள் உரையாடியில் (Chat) மறைந்து இருக்கும் (Invisible Mode) வசதி இல்லை, ஆனால் கூகிள் மின்னஞ்சலில் உள்ள உரையாடியில் இது உள்ளது. இதனால் பலர் இந்த வசதியை பயன்படுத்த கூகிள் மின்னஞ்சலில் உள்ள உரையாடியில் தான் இணைந்து இருப்பார்கள். இது வழக்கமாக இடது புறத்தில் இருக்கும், அதனுடன் Lable கள் இருப்பதால் ரொம்ப கீழே இருக்கும். இதை தவிர்க்க இதை இணைத்தால் உரையாடி பகுதி வலது புறத்தில் மாறி விடும்.



Pictures in chat: இதை இணைப்பதின் மூலம் நம்முடன் உரையாடுபவர் படம் (அவர்கள் இணைத்து இருந்தால்) நமக்கு தெரியும்




Mark as Read Button: தேவையற்ற மின்னஞ்சல்கள் பல நமக்கு வரும் அல்லது அந்த மின்னஞ்சலில் என்ன இருக்கும் என்று முன்பே தெரியும் எனவே படிக்காத மின்னஞ்சல்களாக (Unread Mails) இருப்பது எரிச்சலை தரலாம் எனவே அவை அனைத்தையும் மொத்தமாக தேர்வு செய்து Mark as read பொத்தானை அழுத்துவதன் மூலம் அனைத்தும் படிக்கப்பட்ட மின்னஞ்சல்களாக (Read) மாறி விடும்.



YouTube previews in mail: இது நமக்கு Youtube சுட்டி (Link) மின்னஞ்சலில் வந்தால் அதன் முன்னோட்டத்தை நமக்கு மின்னஞ்சலின் கீழ் பகுதியில் சிறிய அளவில் காட்டும். நாம் சுட்டியை சொடுக்கி Youtube செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதைப்போல வசதி Picasa மற்றும் Flickr க்கு உண்டு.



Undo Send: இது மிகவும் பயனுள்ள ஒன்று, நாம் எப்போதும் அவசரக்காரர்கள் அதனால் ஒருவருக்கு அனுப்ப வேண்டிய மின்னஞ்சலை மாற்றி தவறுதலாக மற்ற ஒருவருக்கு அனுப்பி விடுவோம்.. அப்புறம் அடடா! வடை போச்சே! என்று மண்டை காய்வோம். இதற்கு தான் கூகிள் தரும் இந்த வசதி. நாம் மின்னஞ்சல் அனுப்பிய பிறகு அதை கூகிள் அனுப்பாமல் சில நொடிகள் வைத்து இருக்கும், அதற்குள் நம் தவறை உணர்ந்து விட்டால் Undo வை அழுத்துவதன் மூலம் அதை அனுப்பாமல் தவிர்க்கலாம்.

மேற்கூறியவை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்

Monday, January 25, 2010

MS WORD WATERMARK TEX இணைப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க

MS WORD WATERMARK TEX இணைப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க

உங்கள் pendrive இல் Adobe photoshop CS


போட்டோ
இமேஜ் எடிட் செய்ய பயன்படும் மென்பொருட்களில் அநேகமானவர்களால்
பயன்படுத்தப்படுவது Adobe photoshop என்ற மென்பொருள் ஆகும். இந்த Adobe
photoshop மென்பொருளை நாமும் நம்முடைய
கணினியில் பயன்படுத்தி வருகிறோம்.

ஆனால்
நாம் சில நேரங்களில் நம்முடைய நண்பர்களின் கணணியையோ அல்லது browsing
center இல் உள்ள கணணியை பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படலாம்.

ஆனால்
அங்கு Adobe photoshop மென்பொருள் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்காது.
அத்துடன் மென்பொருட்களை இன்ஸ்டால் செய்யும் Administrator உரிமம் lock
செய்யப்பட்டிருக்கும். இதனால் உங்களிடம் photoshop மென்பொருள் இருந்தாலும்
நீங்கள் அதை இன்ஸ்டால் செய்ய முடியாது. ஆனால் இன்ஸ்டால் செய்யப்பட்ட ஒரு
Adobe photoshop மென்பொருளை உங்கள் pendrive இல் வைத்திருந்தால் நீங்கள்
எந்த கணனியில் வேண்டுமானாலும் இணைத்து உங்கள் pendrive இல் வைத்தே
இயக்கலாம். உங்களுக்காக Adobe photoshop CS என்ற மென்பொருள் pendrive இல்
வைத்து இயக்ககூடியதாக மாற்றப்பட்டு தரப்படுகிறது. இந்த மென்பொருளை
தரவிறக்கி அதை unzip செய்து உங்கள் pendrive இல் copy செய்து பின்பு
அதனுள் உள்ள Portable_PS_8.exe என்ற file ஐ open செய்து பயன்படுத்தலாம்.

குறிப்பு
இந்த மென்பொருளை pendrive இல் வைத்து இயக்குவதை விட pendrive இல்
கொண்டுசென்று அதனை உங்களுக்கு photoshop தேவைப்படும் கணனியின் desktop இல்
past செய்து கணனியிலிருந்து open செய்தால் வேகமாக இயங்கும்...
மென்பொருளைத் தரவிறக் இங்கே அழுத்தவும்

Saturday, January 16, 2010

Aayirathil Oruvan 2010 CAM Print First On Net Ever

Aayirathil Oruvan 2010 CAM Print First On Net Ever


Code:
http://rapidshare.com/files/336056087/Aayirathil_Oruvan_2010.avi.001
http://rapidshare.com/files/336057642/Aayirathil_Oruvan_2010.avi.002
http://rapidshare.com/files/336057688/Aayirathil_Oruvan_2010.avi.003
http://rapidshare.com/files/336058310/Aayirathil_Oruvan_2010.avi.004
http://rapidshare.com/files/336057649/Aayirathil_Oruvan_2010.avi.005
http://rapidshare.com/files/336058351/Aayirathil_Oruvan_2010.avi.006
http://rapidshare.com/files/336059337/Aayirathil_Oruvan_2010.avi.007
http://rapidshare.com/files/336059180/Aayirathil_Oruvan_2010.avi.008

Monday, January 11, 2010

வீரம் விளைந்த மண்ணில் வீரத் தந்தையின் வித்துடல் தகனம் செய்யப்பட்டது

வீரம் விளைந்த மண்ணில் வீரத் தந்தையின் வித்துடல் தகனம் செய்யப்பட்டது


[படங்கள்]
மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் பூதவுடல் பல்லாயிரக்கணக்கான
மக்களின் வணக்க நிகழ்வுகளுடன் தகனம் செய்யப்பட்டது. எமது தந்தையின் ஆத்மா
சாந்தியடைய புலம்பெயர் தமிழீழத்தோடு இணைந்து மீனகம் தளமும் அஞ்சலி
செலுத்துகிறோம்.












































Back to top

Friday, January 8, 2010

ஐயாவுக்குக் கண்ணீர் அஞ்சலிகள். அவரது மனைவி, பிள்ளைகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்க

ஐயாவுக்குக் கண்ணீர் அஞ்சலிகள். அவரது மனைவி, பிள்ளைகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.



பிரித்தானியாவில் வீரத்தந்தையின் வீர வணக்க நிகழ்வு
திகதி: 08.01.2010 // தமிழீழம்
சிறீலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டு தனிமைச் சிறையில் அடைத்து
வைக்கப்பட்டிருந்த போது சாவடைந்த தமிழீழத் தேசியத் தலைவரின் தந்தை
திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் வீரவணக்க நிகழ்வு எதிர்வரும் 10ம்
நாள் பிரித்தானியாவில் நினைவுகூரப்படுகின்றது.

Resized to 45% (was 2516 x 2779) - Click image to enlarge
Enlarge this imageReduce this image Click to see fullsize


Thursday, January 7, 2010

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தந்தை மரணம்: இலங்கை ராணுவம் அறிவிப்பு

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தந்தை மரணம்: இலங்கை ராணுவம் அறிவிப்பு


விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை காலமானார் என்று இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. அவருக்கு வயது 86.



இராணுவத்தின் கொடிய
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நேற்று (06.011.2009)
இரவு காலமானதாக இராணுவ தரப்பு தெரிவித்துள்ளது. இது ஒரு இயற்கை மரணம்
என்று ராணுவத்தின் செய்திக் குறிப்பு கூறுகிறது.



இறுதிப் போரின்போது,
வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாளும் மக்களுடன் ராணுவக் கட்டுப்பாட்டுப்
பகுதிக்கு வந்துவிட்டனர். கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்புப்பிரிவில்
வேலுப்பிள்ளையும் அவரது மனைவி பார்வதி அம்மாளும் தடுத்து
வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை கடைசி வரை விடுவிக்க இலங்கை அரசு மறுத்து
வந்தது.









அதன்பிறகு இவர்களின்
நிலை என்ன, எங்கே வைக்கப்பட்டிருந்தார்கள் என்ற தகவல்கள் எதையும் இலங்கை
அரசு தெரிவிக்கவில்லை. கொடிய சித்திரவதைகளை அந்த வயதான தாயும் தந்தையும்
அனுபவித்ததாக இலங்கை பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வந்தன.



இந்நிலையில்
வேலுப்பிள்ளை நேற்று (06.01.2009) இரவு காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது உடலையாவது இலங்கை அரசு காட்டுமா, தமிழர்களிடம் ஒப்படைக்குமா? என்று
தெரியவில்லை.



பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் பற்றி எந்த தகவலும் இலங்ûகை ராணுவம் வெளியிடவில்லை.


Wednesday, January 6, 2010

புதிய கணிணி வாங்குபவர்களின் கவனத்திற்கு

நண்பர்களே அனைவருக்கும் இலவசமாகவும் சட்டரீதியாகவும் கணிணிக்கு அதிமுக்கிய தேவையான நல்ல மென்பொருட்கள் கீழே பட்டியலிட்டிருக்கிறேன். அனைவருக்கும் உபயோகமாக இருக்கும். புதிய கணிணி வாங்குபவர்கள் இந்த மென்பொருள் இருந்தால் போதும் உங்கள் கணிணியில் நிறைய மென்பொருட்கள் தேட வேண்டிய வேலைகள் மிச்சமாகும்.


நெருப்பு நரி வலைஉலாவி மென்பொருள்

இந்த மென்பொருள் மூலம் இணையத்தளங்களை வேகமாக பார்க்க உதவுகிறது. இந்த மென்பொருள் Open Source என்பதால் அடிக்கடி மேம்படுத்தப்படுகிறது. அது இல்லாமல் நிறைய நீட்சிகளை தரவிறக்கி பயன்படுத்த முடிவதால் மிகவும் எளிதாகிறது வேலைகள். இதன் புதிய பதிப்பு 3.5. வெளியிடப்பட்டுள்ளது.
மென்பொருள் தரவிறக்க சுட்டி
நீட்சி தரவிறக்க சுட்டி



வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்

இது மிகவும் முக்கியமானது ஏனென்றால் அநேகம் பேர் புதிய கணிணி வாங்கியவுடன் இணைய இணைப்பு பெற்று விடுகின்றனர். அதன் வழியாக நிறைய மென்பொருள், படங்கள் ஆகியவை தரவிறக்கும் போது வைரஸ் வந்து புதிய கணிணியை பாழ் செய்ய நேரிடுகிறது. அதை தடுக்க இந்த மென்பொருளை நிறுவிய பிறகு இணையத்தில் உலாவலாம். மென்பொருள் சுட்டி

டிபிராக் மென்பொருள்

கணிணி வாங்கி மாதம் ஒருமுறை இரு மாதத்திற்கு ஒரு முறை டிபிராக் செய்வது நல்லது இதன் மூலம் கணிணியின் வன்தட்டில் இடம் மாறி அமர்ந்திருக்கும் கோப்புகள் ஒரு ஒழுங்கு வரிசையாக அமர்ந்து நாம் கையாள்வதற்கு சுலபமாக இருக்குமாறு மாற்றியமைக்கப்படுகிறது. மென்பொருள் சுட்டி


சிசிகீளினர் மென்பொருள்

இந்த மென்பொருள் இணையத்தில் உலாவிய பிறகு உள்ள தற்காலிக கோப்புகளை நீக்கலாம். தேவையில்லாத மென்பொருட்களை நீக்க முடியும். மென்பொருள் சுட்டி


ஐஸ் ஆர்க்

இந்த மென்பொருள் விண்ஜிப் போன்ற் ஒரு மென்பொருள். இந்த மென்பொருள் மிகவும் பிரபலமான 7-ZIP, A, ACE, ARC, ARJ, B64, BH, BIN, BZ2, BZA, C2D, CAB, CDI, CPIO, DEB, ENC, GCA, GZ, GZA, HA, IMG, ISO, JAR, LHA, LIB, LZH, MDF, MBF, MIM, NRG, PAK, PDI, PK3, RAR, RPM, TAR, TAZ, TBZ, TGZ, TZ, UUE, WAR, XXE, YZ1, Z, ZIP, ZOO போன்ற கோப்புகளை திறமையாக கையாள்கிறது.

மென்பொருள் தரவிறக்க சுட்டி




கூகிள் பிகாஸா மென்பொருள்

இந்த மென்பொருள் மூலம் நம் கணிணியில் உள்ள புகைப்படங்களை சுலபமாக தேடி ஒரு ஒழுங்குபடுத்த முடியும். புகைப்படங்களை ஸ்லைடுகளை கோப்பாக உருவாக்க முடியும். புகைப்படங்களை எடிட் செய்ய முடியும்.

மென்பொருள் சுட்டி



பிடிஎப் மாற்றி

பிரிண்டர் இல்லாதவர்கள் தங்கள் கோப்புகளை பென் ட்ரைவில் சேமித்து இணைய நிலையங்களுக்கு சென்று பிரிண்ட் எடுத்து வருவர். அவ்வாறு ஒரு பத்து எம்பி கோப்பை 1 எம்பி கோப்பாக கொண்டு சென்றால் மிகவும் இடம் குறைவாக பிடிக்கும் என்பது நல்ல விஷய்மதானே அதற்கு இந்த மென்பொருள் மூலம் உங்கள் கோப்புகளை பிடிஎப் கோப்பாக சேமிக்க முடியும்.

மென்பொருள் சுட்டி



யூட்யூப் தரவிறக்கி/ மாற்றி

யூட்யூப் இணையத்திலிருந்து வீடியோக்களை தரவிறக்க இந்த மென்பொருள் உபயோகமாகவும் வேகமாகவும் இருக்கும். தரவிறக்கும் வீடியோக்களை நமக்கு பிடித்த கோப்புகளாக மாற்றி பார்க்க முடியும். சுட்டி




விஎல்சி மீடியா ப்ளேயர்

நாம் வைத்திருக்கும் அனைத்து வகையான வீடியோக்களை பார்க்க இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாக இருக்கும். இந்த மென்பொருளில் பலவகையான உதவிகள் உள்ளன. நீங்கள் பார்க்கும் படத்தை தேவையானதை புகைப்படமாக (ScreenShot) எடுக்கலாம். வீடியோவை தேவையான அளவு கட் செய்து எடுக்கலாம். வீடியோவை கன்வேர்ட் செய்யலாம். மென்பொருள் சுட்டி


பூபார் 2000

இந்த மென்பொருள் ஒரு மியூசிக் ப்ளேயர். இதன் மூலம் பலதரப்பட்ட ஆடியோ கோப்புகளை ப்ளே செய்து கேட்க முடியும். மற்ற மியூசிக் ப்ளேயர் மென்பொருட்களுடன் ஒப்பிடுகையில் இதன் தரமும் பிரமிக்க வைக்கிறது. அது மட்டும்மல்ல குறைந்த அளவு மெமரி எடுத்துக் கொள்கிறது என்பது இதன் சிறப்பம்சம். மென்பொருள் சுட்டி




டிவிடி சிடி எழுதி

நாம் வைத்திருக்கும் கோப்புகளை டிவிடியில் பிரதியெடுக்க இந்த இலவச மென்பொருள் மிகவும் உபயோகமாகயிருக்கும். மென்பொருள் சுட்டி





இந்த மென்பொருளின் வரிசை என்னுடைய கருத்து மட்டுமல்ல அனைத்து கணிணி உபயோகிப்பவர்களின் கருத்தும் கூட. வேறு என்ன மென்பொருள் சேர்க்கலாம் என்று பின்னூட்டமிடுங்கள் அடுத்த பதிவில் சேர்த்து எழுதிவிடுவோம்.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடமும் சொல்லுங்க அதோட உங்கள் ஒட்டினை அனைத்து திரட்டிகளிலும் குத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Tuesday, January 5, 2010

வைன் குடிப்பது நல்லதுதானா?

வைன் குடிப்பது நல்லதுதானா?




An apple a day keeps the doctor away என
மேல்நாட்டவர்கள் சொல்லுவார்கள். இதில் மருத்துவ ரீதியான உண்மை ஓரளவு
இருந்தாலும் கூட இதனைக் கடைப்பிடிப்பவர்கள் அங்கும் அரிதுதான்.


ஆனால் தினமும் வைன் குடிப்பது நல்லதென மேல் நாட்டவர்கள் பலரும் நம்புகிறார்கள். பெரும்பாலானவர்கள் கடைப்பிடிக்கவும் செய்கிறார்கள்.


உடல் நலத்திற்காக அல்ல!




அது கொடுக்கும் இன்பத்திற்காகக் குடிப்பவர்களே அதிகம். பெண்களும் இதில் அடங்குவர்.


வைனின் நல்ல பயன்கள்


உண்மையில் வைனின் மருத்துவ பயன்கள் பற்றி பல ஆய்வுகளும் செய்யப்பட்டுள்ளன. திராட்சை ரசம் எனப்படும் இது

புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கிறதாம்.

இருதயத்தைப் பாதுகாக்கிறதாம்,

வயதாகும் போது ஏற்படும் மூளை மந்தமாவதைத் தடுக்கிறது,

நீரிழிவு, மூட்டுவாதங்களைத் தடுக்கிறது

என இப்படிப் பல ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது.


வைன் இவ்வாறு பல உடல்நல நன்மைகளை ஏற்படுத்துவதற்குக் காரணம் என்ன?


அதிலுள்ள எந்தப் பொருள் இவ்வாறான நன்மைகளைச் செய்கின்றன?


அதிலுள்ள மதுவம் எந்தவித நன்மையையும் செய்யவில்லை என்பதை முதலிலேயே
தெளிவாகப் புரிந்த கொள்ள வேண்டும். ஆனால் மதுவத்தை தவிர ஏராளமான ரசாயனப்
பொருட்கள் இயற்கையாகவே அதில் அடங்கியுள்ளன. அவற்றில் சிலதான் உடலுக்கு
ஆரோக்கியத்தைக் கொடுக்கின்றன.



வைனில் உள்ள மதுவல்ல காரணம்



ரெஸவெடரோல் triglyceride அளவை அதிகரிப்பதாகத் தெரிகிறது. எனவே ரைகிளிசரைட் அளவு அதிகமுள்ளவர்களுக்கும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளவர்களுக்கும் நல்லதல்ல.




உதாரணமாக நீரிழிவு நோயாளருக்கு பெரும்பாலும் ரைகிளிசரைட் அதிகரித்தே காணப்படுகிறது. எனவே அத்தகையவர்களுக்கு வைன் ஏற்றதல்ல.



கபாலக் குத்து எனப்படும் (Red wine) அருந்தியதும் பலருக்கு காபலக் குத்து பட்டென வந்துவிடுகிறது.



வைன் உடலிலுள்ள பெண் ஹோர்மோன் ஆன ஈஸ்ரோஜன் அளவை அதிகரிப்பதால்
மார்புப் புற்றுநோய் வந்தவர்களுக்கும் வர வாய்ப்புள்ளவர்களுக்கும்
நல்லதல்ல.


வைன் என்பது உண்மையில் ஒரு மது.

மதுவில் உள்ளது வெற்றுக் கலோரிகளே.

உதாரணமாக ஒரு கிராம் மாப்பொருளில் 4 கலோரிகள் இருக்கிறது.

அதேபோல ஒரு கிராம் புரதத்திலும் 4 கலோரிகள் இருக்கிறது.

ஆனால் ஒரு கிராம் மதுவில் 7 கலோரிகள் இருக்கிறது.


இதனால் அது உடல் எடை அதிகரிப்புக்கும் காரணமாகிறது.


எடை அதிகரித்தால் ஏற்படும் நோய்கள் அனேகம்.


எவ்வாறு அருந்துவது


இந்த ரெஸவெடரோல் உணவுக் கால்வாயினால் உறிஞ்சப்பட்டு ஈரலில் மாற்றங்களுக்கு ஆட்பட்டே எமது இரத்தச் சுற்றோற்டத்தை அடைகிறது.


அதாவது ஒருவர் வைன் குடிக்கும்போது உட்கொள்ளும் ரெஸவெடரோல் முழுமையாக
இரத்தத்தை அடையாது. இதனால் அதிலிருந்து கிடைக்கக் கூடிய நல்ல விளைவுகள்
முழுமையாக குடிப்பவருக்குக் கிடைப்பதில்லை.


ஆனால் குடலை அடையும் முன்னர் வாயிலுள்ள மெனசவ்வுகளால் உறிஞ்சப்படும் ரிசவஸ்டரோல் முழுமையாக இரத்த ஓட்டத்தை அடைகிறதாம்.


அதாவது வைனை பக்கெனக் குடித்து முடிக்காமல் வாயில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிப்பதால் சேதாரமின்றி இரத்தத்தை அடைகிறது.


இன்னொரு விடயம் சிவத்த வைன், நிறமற்ற வைனைவிட அதிக நன்மைகளைத் தருகிறதாம்.





காரணம் என்னவெனில் சிவத்த வைன் உற்பத்தியின் போது திராட்சையின் தோல்
நீண்ட நேரம் அகற்றப்படாது இருப்பதால் வைனில் ரெஸவெடரோல் செறிவு அதிகமாக
இருப்பதே ஆகும்.




ஆனால் நிறமற்ற வைன் உற்பத்தியின் போது புளிக்க விடு முன்னரே திராட்சையின் தோல் அகற்றப்படுகிறது.


வைன் குடிப்பது அவசியமா?


மீண்டும் வைன் குடிப்பது நல்லதா எனக் கேட்கிறீர்களா?


நீங்கள் எற்கனவே தினமும் வைன் அருந்துவராயின் தொடர்ந்து அருந்துவதில் தவறில்லை.


ஆனால் அளவோடு மட்டுமே. ஆண்கள் தினமும் இரண்டு டிரிங்ஸ்சும், பெண்கள் தினமும் ஒரு டிரிங் மட்டுமே வைன் அருந்தலாம்.


ஒரு டிரிங் என்பது 5 அவுன்ஸ் அல்லது 140 மில்லி லீட்டர் ஆகும். அளவை
மிஞ்சினால் ஈரல் பாதிப்படைவது உட்பட மதுவின் அனைத்து தீமைகளும் வந்து
சேரும்.



வழமையாக மது அருந்தாதவர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக வைன் குடிக்க ஆரம்பிக்க வேண்டுமா என்று கேட்டால் நிச்சயம் அவசியம் இல்லை.


வைன் உட்பட எந்த மதுவையும் குடிக்காதிருப்பது நிச்சயம் நல்லது.
அதிலிருந்து பெறக் கூடிய ஒரு சில நல்ல பயன்களை ஏனைய உணவு வகைளிலிருந்து
தாராளமாகப் பெறலாம்.


வைன் அருந்துவது அவசியம்தானா என்று இப்பொழுது நான் உங்களைக் கேட்கிறேன்.


என்ன சொல்லப் போகிறீர்கள்?


டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
-------------------------------------------------- இனி உங்கள் வலைப்பதிவில் எழுத்துக்களை செலக்ட் செய்வதினை மட்டும் தடுக்க விரும்பினால் கீழுள்ள கோட்களை சேர்க்கவும். -----------------------------------------------------------------