Sunday, February 28, 2010

போடோஷாப் கற்போம் பாகம்-3

சென்ற இரண்டாவது பாகத்தில் Marquee Tools பற்றி பார்த்தோம். மேலும் இந்த டூலைக்கொண்டு பல வசதிகளை எப்படி பெருவதென்று பார்ப்போம். நீங்கள் Marquee tool select செய்த பின் உங்கள் போட்டோஷாப்பில் பார்த்தீர்கலென்றால் உங்களுக்கு File, Edit, Image பாருக்கு கீழே சில செலக்ஷன் டூல் இருக்கின்றன கீழே உள்ள படத்தை பார்க்க....


இதில் முதலில் இருப்பது New Selection. சென்ற பதிவில் இதை பார்த்தோம் அதாவது ஒரு படத்தில் ஒரு பகுதியையை ஒரு முறை செலக்ட் செய்வதற்கு இதை பயன் படுத்துவோம் நாம் சதுரமாகவோ - செவ்வகமாகவோ படம் இருந்தால் இதன் மூலம் தேர்வு செய்து கட் செய்து எடுக்கின்றோம் இதுவே செவ்வகம் நெடுக்கு வசத்திலும் படுக்கை வசத்திலும் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தால் என்ன செய்வீர்கள். அதற்குதான் இந்த இரண்டாவதாக உள்ள Add to Selection Tool உதவுகிறது. இப்போது இந்த படத்தைபாருங்கள்.


இந்த படத்தில் பக்கத்திலிருக்கும் இவ்விரண்டு கட்டிடமும் வேண்டும் ஆனால் New Selection மூலம் செலக்ட் செய்தால் ஒரு கட்டிடம்தான் செலக்ட் ஆகும். இதை எவ்வாரு Add Selection Tool லை பயன்படுத்தி இரு கட்டிடத்தைம் கட் செய்து எடுப்பதைப்பற்றி பார்ப்போம். முதலில் New Selection மூலம் ஒரு கட்டிடத்தை மட்டும் தேர்வு செய்யுங்கள். மேலே படத்தில் உள்ளது போன்று... அடுத்து Add Selection Toolலை க்ளிக் செய்து படத்தின் மற்ற கட்டிடத்தை தெரிவு செய்யுங்கள். படத்தை பாருங்கள்


இப்போது காப்பி செய்து New Page Open செய்து பேஸ்ட் செய்யுங்கள். உங்களுக்கு இந்த மாதிரி படம் வரும்.


இதுவரை நாம் Rectangle Marquee Tool பார்த்தோம். அதுபோல் Eliptical Marquee Tool லும் நாம் படங்களை தேர்வு செய்யலாம்.


இதிலும் மேற்படி நாம் Selection Tool ஆல் தேர்வு செய்ததை பாருங்கள்.


அடுத்து Subtract Selection Tool இந்த Selection Tool க் கொண்டு என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.. இப்போது நான் ஒரு காரின் படத்தை ஓபின் செய்துள்ளேன் இந்த காரின் இரு சக்கரமும் நமக்கு வேண்டாமெனின் அதை எப்படி நீக்குவதென்று பார்ப்போம். எப்படி அவரை நீக்குவது? அதற்கு இந்த Subtract Selection Tool உதவும். முன்பு சொன்னவாறு படம் தேர்வு செய்து இந்த டூல் மூலம் அந்தக் காரின் இரு சக்கரத்தையும் Select பண்ணுங்கள் சக்கரம் Roundக இருப்பதனால் நாம் Elliptical Marquee Tool பயன் படுத்தி கீழ் உள்ளவரு Select செய்வோம் படத்தை நோக்குக..


பின்னர் Select செய்தவற்றை Copy செய்து புதிய Page open செய்து Paste செய்யவும் பின்னர் இது போன்று தோன்றும்


இதுபோல் புகைப்படங்களை நீங்கள் தேர்வு செய்து விதம்விதமாக கட் செய்து பார்க்கலாம். ஆனால் நீங்கள் புகைப்படங்களை மாறுதல் செய்யும் எப்போதும் நீங்கள் அந்த படத்தை Duplicate எடுத்து அதைதான் மாறுதல் (Edit) செய்ய வேண்டும் காரணம் நீங்கள் Original படத்தில் மாறுதால் ஏதும் செய்து Save பண்ணி அது தவறு என்றால் உங்களுக்கு திரும்ப அந்த படம் ஒரிஜினல் போல கிடைக்காது அதற்காகதான் அதை Duplicate எடுத்து அதை Edit செய்யவும் அது எவ்வாறு எனின் படத்தில் மேல் பாரில் Right Click செய்து பார்தீர்களேயானால் அதில் Duplicate என்று தோன்றும் அதை Click செய்யவும் இப்படத்தை நோக்குக..


இனி அடுத்த பாகத்தில் சந்திப்போம் உங்கள் Commentடை தரவும் ஆதரவுக்கு நன்றி.

Thursday, February 25, 2010

போடோஷாப் கற்போம் பாகம்-2

உங்கள் ஆதரவுக்கு நன்றி. நண்பர்களே நாம் பாகம் 1ல் போட்டோஷாப் அறிமுகமும் Tools பற்றியும் பார்த்தோம் இனி இந்த Toolsகளின் மிக முக்கியமானதும், அதிகமாக உபயோகிக்கும் Toolsகளைப்பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.

Rectangular Marquee Tool


இந்த Toolளை நாம் படத்தின் எங்களுக்கு தேவையான பகுதியோ அல்லது முழு படத்தையோ தேவையாயின் அதை வெட்டி (Cut) எடுக்க உதவுகின்றது. இதன் உள்ளே நான்கு Tool இருக்கின்றன இந்நான்கு Toolகளிலும் இரண்டு Toolsதான் அதிகம் பயன் படுதுவோம் இந்த Toolsகளைக் காண அதன் மேல் Right Click செய்தால் மேற்கண்டவாறு தோன்றும். Rectangular Marquee Toolளைப் போலவே Elliptical Marquee Tool இப்போ உங்களுக்கு விருப்பமான படத்தொன்றை ஓபின் பண்ணவும் File-Open-Select your Picture பிறகு Rectangular Marquee Tool தெரிவு செய்து உங்களுக்கு வேண்டிய பகுதியை அதன் மூலம் தெரிவு செய்க. அதன் பின் Right Click செய்யவும்




அதன் பின்னர் உங்களுக்கு மேற்கண்ட வாறு சாரளம் ஓப்பன் ஆகும். இதில் முதலில் உள்ளது Deselect. ஆதாவது நாம் தேர்ந்தேடுத்த Marquee Tool தேவையில்லையெனின் இதை செலக்ட் செய்யவும். நாம் தேர்ந்தேடுத்தது மறைந்து விடும் இதற்கு Shortcut key Ctrl + D. அடுத்து உள்ள Select Inverse. நாம் தேர்ந்தேடுக்கும் பாகத்தை தவிர மற்ற இடங்கள் செலக்ட் ஆகும். உதாரணத்திற்கு கீழே உள்ள புகைப்படத்தில் உள்ள படத்தில் கண்ணை மட்டும் Rectangle Marquee Tool ஆல் செலக்ட் செய்துள்ளேன். அடுத்து அதில் வைத்து ரைட்கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ் கண்டவாறு சரளம் ஓப்பன் ஆகும்.




இதில் உள்ள Select Inverse தேர்வு செய்யவும். இப்போது உங்களுக்கு நீங்கள் தேர்வு செய்த பாகத்தை மட்டுமில்லாது படத்தை சுற்றியும் உங்களுக்கு சிறுசிறு கட்டம் மினுமினுத்தவாறு ஓடும். இப்போது மீண்டும் எடிட் சென்று காப்பி செய்து பைல் சென்று புதிய தாக நீயு பைல் ஓப்பன் செய்யவும்.அளவுகளை மாற்றாமல் ஓகே கொடுத்து எடிட் சென்று பேஸ்ட் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்டவாறு படம் தோன்றும்.


(பிரபலமான நடிகைகளின் கண்களை மட்டும் மறைத்திருப்பதைப் பார்திருப்பீர்கள். அதை இவ்வாறும் செய்வார்கள்.) அடுத்து Feather பாடம்.



Feather என்றால் இறகு என்று பொருளாகும். இறகை பார்த்திருப்பீர்கள். அது நடுவில் நிறங்கள் அடர்த்தியாகவும் ஓரம் செல்ல செல்ல நிறம் மங்கியதுபோல் காணப்படும். அதுபோல் போட்டோவிலும் இந்த மாற்றம் கொண்டுவர இந்த Feathering Tool பயன்படுகிறது. முதலில் படத்தை தேர்வு செய்யுங்கள். முன்பு கூறியபடி Rectangle Marquee Tool-தேர்வு செய்து மவுஸால் ரைட் கிளிக் செய்யவும். வரும் சாளரத்தில் Feather கிளிக் செய்யவும் இதற்கு Shortcut key Alt+Ctrl +D உங்களுக்கு Feather Selection உடன் ஒரு சாளரம் ஓப்பன் ஆகும். இதில் நீங்கள் விரும்பும் Radius Pixel அளவை தேர்வு செய்யவும். இந்த அளவு அதிகமாக அதிகமாக உங்களுக்கு படத்தின் Feather அளவில் வித்தியசம் வருவதை காண்பிர்கள். கீழ்க்காணும் படத்தை நோக்குக.



அதில் பிக்ஸல் ரேடியஸ் அளவு 25 வைத்துள்ளேன்.


நாம் 25 பிக்ஸலில் தேர்வு செய்தபடம் கீழே.



அதுபோல் குறைந்த அளவு பிக்ஸல் ரேடியஸ் கொடுக்கும் போது நீங்கள் தெரிவு செய்து cut பண்ணும் படத்தின் ஓரங்களில் Feather குறைவாக காணப்படும். நீங்கள் செய்து பார்க்கும்போது அதன் வித்தியாசங்களை உணர்வீர்கள்.



மேற்கண்ட பாடங்களில் நீங்கள் நல்ல பயிற்சி எடுத்தால்தான் அடுத்து இதன் மூலம் நடத்தப்படுகின்ற பாடங்களுக்கு உங்களுக்கு உதவியாக இருக்குமென நினைக்கின்றேன்.


இனி அடுத்த பாகத்தில் சந்திப்போம் உங்களுடைய கருத்துக்களை பதிய மறக்காதீர்கள்.

Tuesday, February 23, 2010

போடோஷாப் கற்போம் பாகம்-1

இன்றைய காலத்தில் அச்சுத்துறை மற்றும் Studio போன்ற இடங்களில் முக்கிய இடம் வகிக்கின்றது என்றால் அது மிகையாகாது. இதை கற்பதற்கு பல மாணவர்களுக்கு ஆர்வம் இருக்கின்ற ஆனால் கற்றுக்கொல்ல வசதின்மை, நேரமின்மை போன்ற காரணங்களினால் ஒதுங்கியிருக்கின்றார்கள். அவர்களுக்காகவேண்டி தலைமை நடத்துனர் அவர்களின் வேண்டுக்கோள்கினங்க இப்போடோ ஷாப் சம்பந்தமான கற்கை நெரிகளை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன். இதில் சில வற்றுக்கள் நீங்கள் கற்றவைகளும் இருக்கலாம். ஏனெனில் கல்லாதவர்களுக்கு கற்றுக்கொடுப்பது கற்றவரின் கடமை.



முதலாவதாக நாம் இதை திறக்கும் முறையைப் பார்ப்போம். Start-Programs-Photoshop சென்று Click பண்ணவும்.





பிறகு இதுபோன்ற பகுதி ஓபின் ஆகும்



இனி இதன் வேலைபாடுகளைக்கற்க முன் அடிப்படையில் உபயோகிக்கும் Toolsகளை பற்றி பார்ப்போம். கீழே உள்ள படத்தில் Toolsகளின் பெயர்களை கவணியுங்கள்.





அடுத்து இந்த Toolsகளைப்பற்றியும் அதன் பயன் பாடுகளையும் அதை கையாலும் முறையையும் அடுத்த பாகத்தில் கற்போம்!


மறக்காமல் உங்கள் Comment தெரிவிக்கவும்!


உங்கள் ஆர்வமே என்னை இன்னும் முன்னெடுத்து செல்ல வைக்கும்!

Wednesday, February 17, 2010

தாம்பத்தியம் தழைக்க தங்கமான யோசனைகள்

தாம்பத்தியத்தின்
வெற்றிக்கும் தொடர் வெற்றிக்கும் கணவன், மனைவி இருவரின் உடல்நலமும்
மனநலமும் முக்கியம். அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த - புரதம்,
கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் நிறைந்த சைவ / அசைவ உணவுக்
கூறுகளையும், காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றையும் உண்ண வேண்டும்.

எந்தச் சந்தர்ப்பத்திலும் பாலியல் சக்தியைப் பாதிக்கக்கூடிய அலோபதி மருந்துகளை உண்ணக்கூடாது.

உணவு உண்ட ஒரு மணிநேரத்திற்குள் உடலுறவு செய்வது கூடாது. இதனால் மூட்டு உபாதைகளும், வேறு பல உடல்நலக்கோளாறுகளும் ஏற்படும்.

உறவுக்கு
முன் இனிமையான உரையாடலும், உணர்வுப்பறிமாறலும், முன்விளையாடலும் உறவு
முழுமைபெற உதவும். தாம்பத்தியம் ஓர் இனிய சங்கீதம். இசைப்பதும்,
ரசிப்பதும் மென்மையாய் நிதானமாய் அமைய வேண்டும் அவசரங்களால் தாம்பத்தியம்
அரைகுறையாக அலங்கோலமாக ஆகிவிடும்.

அன்றாட வாழ்வில் அலையலையாய்
வரும் குடும்ப பிரச்சனைகளில் கணவன் மனைவியரிடையில் கருத்துவேறுபாடுகள்,
மனச்சோர்வுகள், மன இறுக்கங்கள் போன்றவை ஏற்படும். அது நீடிக்கக்கூடாது.
பரஸ்பரம் புரிதலோடு பேசித் தீர்க்க வேண்டும். மனஒற்றுமை ஏற்படாமல்
உடல்களால் மட்டும் இயங்கி தேகவேட்கையைத் தணிக்க முயற்சிப்பது நல்லதல்ல.
மேலும் ஆழ்ந்த மனப்பாதிப்புகள் தாம்பத்திய உறவுக்கு பெரும் எதிரி.

தாம்பத்தியத்தில்
எந்திரத்தனங்களும், எல்லைமீறல்களும் இனிமைதராது. அடிக்கடிவரைமுறையின்றி
உறவு கொள்ள விரும்புவது ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கும். தாம்பத்திய உறவில்
ஏதாவது ஒரு வரையரையைக் காலப்போக்கில் தம்பதியர்கள் தாங்களாகவே நிர்ணயம்
செய்துகொள்வது முக்கியம்.

வயது அதிகமாகும் போது. தாம்பத்திய உறவு இயலாமல் போய்விடுமோ என்ற அச்சம் தேவையற்றது. உடலுறுவுக்கு வயது ஒரு தடை அல்ல.



கணவன்
மனைவியின் அந்தரங்கமான இல்லற வாழ்வில் ஒருவர் விருப்பத்தை மற்றொருவர்.
புரிந்துகொள்ள வேண்டும். இப்படிப்பேசினால் அநாகரீகம் அப்படிச் செய்தால்
அநாகரீகம் என்று எண்ணத் தேவையில்லை. இருவரது விருப்பங்களில் ஆரோக்கியமான
அனைத்துமே, சுகமான அனைத்துமே பாலியல் வாழ்க்கை நெறிப்படி சரியானதுதான்.

கணவனுக்கும்
மனைவிக்கும் தாம்பத்திய தாகம் ஒரே அலைவரிசையில் இருப்பதில்லை.ஆணுக்கு ஆவல்
அடிக்கடி ஏற்படும். பெண்ணுக்கு விருப்பமில்லாதபோது தொல்லை தரக்கூடாது
என்றெண்ணி அடக்கிக்கொள்கிறான். இது தொடர்கதையானால் மனைவி மீது ஒருவித
வெறுப்பு ஏற்படுவது தவிர்க்கமுடியாது. எனவே பெண்கள் ஆண்களின்
மனநிலையறிந்து இயன்றளவு தங்களை சரிசெய்துகொள்ளுவது இல்லறத்தை இனிக்கச்
செய்யும். அடிக்கடி உடலுறவு கொள்ள விரும்பும் பெண்களும் உண்டு.ஆண்கள்
அவர்களது விருப்பம் அறிந்து உதாசீனப்படுத்தாமல் தங்களை சரி செய்து கொள்ள
வேண்டும். பரஸ்பர மனவிருப்பம், தேவை அறிந்து உடல் எழுச்சியை வரவழைத்து
தாம்பத்தியம் மேற்கொள்வது தம்பதியரிடம் என்றென்றும் இறுக்கமான
பிணைப்பையும், இணைப்பையும் உறுதிப்படுத்தும்.



(கட்டுரை அக்டோபர் 2008 மாற்று மருத்துவம் இதழில் வெளிவந்தது)

Tuesday, February 16, 2010

1330 Thirukural in PDF





tirukkuRaL
of tiruvaLLuvar
(in tamil script, TSCII format)

Etext in Tamil Script - TSCII format (v. 1.7)
Etext prep in pdf format: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
This pdf file is based on TSCInaimathi font embedded in the file. Hence this file can be
viewed and printed on all computer platforms: Windows, Macintosh and Unix
using relevant Acrobat Reader, without the need to have the font installed in your computer.
You are welcome to redistribute this file provided this header is kept intact.
© Project Madurai ௨00௧

http://www.ziddu.com/download/6309544/Thirukkural-ProjectMadurai.pdf.html

சீக்கியர்களுக்கு ஒரு நீதி! தமிழர்களுக்கு ஒரு நீதியா?:காங்கிரஸுக்கு ஆதாரங்களுடன்



ராஜீவ்
காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, வேலூர் சிறையில் கடந்த 19
ஆண்டுகளாக வாடி வரும் நளினியை விடுதலை செய்யக் கூடாது என, கடந்த மக்களவைத்
தேர்தலில் நின்று தோற்றுப் போன முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், வார இதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கிறார்.
அவர் மட்டுமின்றி பல்வேறு காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து இவ்வாறு நளினி விடுதலைக்கு எதிராக பேசி வருகின்றனர்.
நளினியின் விடுதலை அளிக்கக்கூடாது என்று பேச, தமிழக காங்கிரஸ் கட்சித்
தலைவர்கள் ஒன்றும் நீதிபதிகள் அல்ல என்பதை இளந்தமிழர் இயக்கம் நினைவூட்ட
விரும்புகின்றது. இது குறித்த வழக்கு இன்றும் நிலுவையில் உள்ள நிலையில்,
நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக பேசி வரும் காங்கிரஸ் கட்சியினரை
இளந்தமிழர் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

நளினி விடுதலை குறித்த விவாதம் எழுந்துள்ள நிலையில், இந்தியப் பிரதமர்
இந்திராகாந்தி படுகொலை குறித்த சில செய்திகளை இளந்தமிழர் இயக்கம் தமிழ்
மக்களுடன் பகிர்ந்து கொள்கின்றது.
இந்தியப் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவருமான இந்திரா
காந்தியை, சீக்கியர்களின் புனிதத் தலமான பஞ்சாப் பொற்கோவிலுக்குள்
இராணுவ நடவடிக்கை எடுத்ததன் விளைவாக, அவர் பதவியில் இருந்த போதே சுட்டுக்
கொல்லப்பட்டார். அவரை சுட்டுக் கொன்ற, சீக்கிய இனத்தைச் சேர்ந்த
பியாந்த் சிங், சத்வந்த் சிங், கேஹர் சிங் உள்ளிட்டோரை இன்றளவும்
சீக்கியர்கள் தியாகிகளாக போற்றி வருகின்றனர். அவர்களது நினைவு நாள்
இன்றும் போற்றுதலுக்குரியதாக சீக்கியர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.


சீக்கிய இனத்திற்காக தியாகம் செய்தவர்கள் (Martyrs of Sikhis) என
சீக்கியர்களின் அதி உயர் பீடமான ‘அகால் தக்கட்’(Akal Takhat) அவர்களுக்கு
2008 ஆம் ஆண்டு சனவரி 6 அன்று பட்டம் சூட்டி கௌரவித்தது. பியாந்த் சிங்
உள்ளிட்டோரின் நினைவாக, சிரோன்மணி அகாலி தளம் அமைப்பு, அக்டோபர் 31
2008 அன்று ‘தியாகிகள் தினம்’ கடைபிடித்தது. தற்போது, நியூசிலாந்தில்
அமைந்துள்ள சீக்கிய மதக் கோவில் ஒன்றில், இவர்களுக்கு படம் வைத்து அஞ்சலி
செலுத்தப்படுவது குறித்து செய்திகள் வெளியாகியுள்ளன.

இதே போல, இந்திரா காந்தியை சுட்டுக் கொன்ற சீக்கியர்களுக்கு,
இன்றளவும் சீக்கியர்களின் புனிதத் தலமான பஞ்சாப் பொற்கோவிலுக்குள்
வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டும் வருகின்றது. இது குறித்த புகைப்பட
ஆதாரத்தை இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி, கடந்த
சனியன்று(13.02.2010) சென்னை தாம்பரத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்
கட்சி சார்பில் நடத்தப்பட்ட மாவீரன் முத்துக்குமார் வீரவணக்கப்
பொதுக்கூட்டத்தில், மக்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன்,
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் அந்நிகழ்வில் கலந்து கொண்டு
காங்கிரஸ் கட்சியினரின் பாசிசப் போக்கைக் கண்டித்தனர்.
தமது இனத்தின் மீது தாக்குதல் தொடுத்த பிரதமரை, சுட்டுக் கொன்ற
சீக்கியர்களை அவ்வின மக்கள்; இன்றும் போற்றுகிறார்கள் என்பது, அந்த
இனத்தின் மீது சீக்கியர்களுக்கு உள்ள பற்றுறுதியை நமக்குப் படம்
பிடித்துக் காட்டுகின்றது.

தமிழகக் காங்கிரஸார் இன்றும் ‘அன்னை’ என்று போற்றுகின்ற இந்திரா
காந்தியை சுட்டுக் கொன்றவர்களை இன்றளவும் சீக்கியர்கள் தியாகிகளாக
போற்றுகின்ற நிலையில், அந்த இனத்திற்கே பிரதமர் பதவி கொடுத்தும்
அலங்கரித்துப் பார்க்கிறது, காங்கிரஸ் கட்சி. ஆனால், இன்னொருபுறத்தில்,
ராஜீவ் கொலையுடன் தொடர்புடையவர் என்ற ஒரே காரணத்திற்காக நளினியை அவரது
குழந்தையின் எதிர்காலம் உள்ளிட்டவற்றை கூட எண்ணாமல், சாகும் வரை
சிறைவைக்கக் கூறும் காங்கிரஸாரின் நிலை, பாரபட்சமானது.

தமிழீழத்தில் தமிழ் மக்களை படுகொலை செய்தும், தமிழ் பெண்களை பாலியல்
வன்புணர்வு செய்தும் இந்திய அமைதிப்படை நடத்திய அட்டூழியங்களுக்கு
எதிர்வினையாகவே ராஜீவ் காந்தி கொலை நிகழ்த்தப்பட்டது என இந்திய
உச்சநீதிமன்றமே தமது தீர்ப்பில் ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த நிலையிலும் கூட, இன உணர்வுடன் சீக்கியர்கள் ஏற்றுக்
கொண்டதைப் போல, தமிழக மக்கள் ராஜீவ் காந்தி கொலையை ஏற்றுக்
கொள்ளவில்லை. அதனை துன்பியல் நிகழ்வாகவே கருதுகின்றனர். இருந்தபோதும்,
தமிழகக் காங்கிரஸ் கட்சியினர், சீக்கியர்களுக்கு எதிராக சீறாமல்,
தமிழர்களுக்கு எதிராக மட்டும் தொடர்ந்து சீறுவது ஏன்? சீக்கியர்களுக்கு
ஒரு நியாயம், தமிழருக்கு ஒரு நியாயமா? என இளந்தமிழர் இயக்கம் தமிழகக்
காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடம் கேள்வி எழுப்புகின்றது.

ராஜீவ் காந்தி கொலை வழக்குத் தீர்ப்பில், நீதிபதி தோமஸ்,
நளினிக்கு இந்தப் படுகொலை நிகழவிருப்பது குறித்து முன்கூட்டியே
தெரியவில்லை என்றும், தெரிந்த போதும் அவரால் அதனைத் தடுத்து நிறுத்திப்,
பின்வாங்க முடியாத சூழல் நிலவியது என்றும் கூறியிருக்கிறார். (ஆதாரம்:
ராஜீவ் காந்தி கொலை வழக்குத் தீர்ப்பு, 1999 SCC (Cri) பக்கம் 787-788).
நீதிபதி தோமஸ் அவர்களின் இந்த வாதத்தை புறந்தள்ளி விட்டு, நளினி தான்
ராஜீவ் காந்தியைத் திட்டமிட்டுக் கொன்றவர் என்பது போல சித்தரிக்க
முயலும், தமிழகக் காங்கிரஸ் கட்சியினர் உண்மையான குற்றவாளியை மறைப்பதற்கு
துணை போகின்றனரா என்ற கேள்வி எழுகின்றது? ராஜீவ் கொலை விசாரணையில் பலரை
இன்னும் விசாரிக்கவே இல்லை என்று விசாரித்த அதிகாரிகளே கூறியுள்ள
நிலையில், தமிழகக் காங்கிரஸார் யாருடைய குற்றத்தை மறைக்க
நாடகமாடுகின்றனர்?

தமிழகக் காங்கிரஸ் கட்சியினருக்கு தைரியமிருந்தால், வக்கிருந்தால்,
தமதுக் கட்சித் தலைவரான இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றவர்களை
தியாகிகளாக போற்றலாமா என்று முதலில் சீக்கிய இனத்தைச் சேர்ந்த பிரதமரிடம்
கேள்வி எழுப்பிவிட்டு, அதன் நியாயங்களை தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்கிப்
பேசிய பின், நளினி விடுதலையைப் பற்றி பேசுங்கள். அதற்கு முன்பு நளினி
விடுதலை குறித்து பேச தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் யாருக்கும் எவ்வித
அருகதையும் இல்லை.

அருணபாரதி
ஒருங்கிணைப்பாளர்
இளந்தமிழர் இயக்கம்








அதீத எடையும் புற்றுநோய்களும்



அவர் வந்து உட்கார்ந்ததுபோது கதிரை வேதனையில் கிரீச்சிட்டு அனுங்கியது!

தனது வருத்தம் பற்றிக் கூறுவதற்கிடையில் அவரது கண்கள் நகர்ந்து கட்டிலின் கீழ் இருந்த எடைகாட்டியில் தங்கி நிலைத்தன.

இவரது நடவடிக்கைகள் எனக்குப் புதினமானவை அல்ல.

பல வருடங்களானப் பார்த்துப் பழக்கம்.

அப் பெண்ணுக்கு தனது எடை பற்றி அக்கறை எப்பொழுதும் உண்டு.

எப்பொழுது வந்தாலும் தனது எடையைப் பார்க்காமல் விட மாட்டாள். எடையை எப்படிக் குறைப்பது என்று ஆலோசனையும் தவறாது கேட்பாள்.

ஐந்து அடி மூன்று அங்குல உயரமுள்ள அவரது தற்போதைய எடை 110 கிலோ ஆகும்.

அடுத்த முறை வரும்போது நிச்சயம் ஒரு கிலோ ஆவது கூடியிருக்கும் என்பது நிச்சயம்.

ஒவ்வொரு தடவையும் எடையைக் குறைப்பது பற்றிய ஆலோசனையைக் கேட்பதுடன் சரி.

அடுத்த முறை வரும்போதுதான் மீண்டும் இப்பிரச்சனை பற்றி சிந்திப்பார் போலும்.

வயது நாற்பது ஏற்கனவே நீரிழிவும் பிரஸரும் வந்து விட்டன.

அதீத எடை என்பது உலகளாவிய ரீதியில் சவாலான ஆரோக்கியப் பிரச்சனையாக உருவாகிவருகிறது. அதீத எடையை எப்படிக் கண்டறிவது?

கண்ணால் காண்பதும் பொய் என்பார்கள்.

அதீத எடை என்பது உங்கள் உறவினரோ அல்லது நண்பரோ கண்ணால் பார்த்துச் சொல்லும் கருத்து அல்ல.

உங்கள் உயரத்திற்கு ஏற்றவாறு எடை இருக்கிறதா என்பதைக் விஞ்ஞான ரீதியில் கணிக்கிறார்கள்.

அவ்வாறு கணிப்பதை உடற்திணிவு (Body Mass Index) என்பதாகக் குறிக்கிறார்கள். இது எடையை கிலோகிராமில் அளந்து அதனை, மீட்டறில் எடையின் வர்க்கத்தால் பிரிக்க வருவதாகும் (BMI=Kg/m2).

உடற்திணிவு
30க்க மேலிருந்தால் அது (body-mass index >30 kg/m2) அதீத எடை எனச் சொல்லப்படுகிறது.
25 முதல் 30ற்குள் இருந்தால் அதிக எடை (Over Weight) எனலாம்.

ஆயினும் இலங்கை போன்ற ஆசிய நாடுகளில்
ஆரோக்கியமான எடை என்பது
உடற்திணிவில் 23ற்குள் இருக்க வேண்டும்.

அதீத எடையே பல்வேறு விதமான நோய்களுக்கு அடிப்படைக் காரணமாக இருக்கிறது.

அத்துடன் இருதய நோய்கள், நீரிழிவு, எலும்புத் தேய்வு நோய் போன்றவற்றுடன் நேரடியாகவும் தொடர்புள்ளதாக இருக்கிறது.

இப்பொழுது ஒரு ஆய்வு அதீத எடைக்கும் புற்று நோய்க்கும் தொடர்புள்ளது என்கிறது. இது ஏதோ ஒரு சிலரில் செய்யப்பட்ட ஆய்வு அல்ல. ஐம்பதிற்கும் அறுபத்து நான்கு வயதிற்கும் இடைப்பட்ட 1.2 மில்லியன் பெண்களில் 5 முதல் 7 வருடங்களுக்குச் செய்யப்பட்டது.

அதீத எடையுள்ளவர்கள் ஏனையவர்களைவிட 10 முதல் 17 சதவிகிதம் சிலவகைப் புற்றுநோய்களுக்கு ஆளாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

கருப்பை, சிறுநீரகம், சதையம், மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களிடையேயான மார்புப் புற்று நோய்,
மாதவிடாய் நிற்காத பெண்களிடையேயான மலக்குடல் புற்றுநோய், களப்புற்று நோய்,
லியூக்கிமியா எனப்படும் குருதிப் புற்றுநோய்,
மல்ரிப்பிள் மையலோமா,
நொன் ஹொட்ஸகின் லிம்போமா

ஆகியன அவ்வாறு எடையுடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்ட புற்று நோய்களாகும்.

கலவரமடையாதீர்கள்.

இதன் அர்த்தம் என்ன?

எடை அதிகரித்தால் புற்றுநோய் கட்டாயம் வரும் என்பதா?

அப்படியல்ல!

புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம், அதிலும் முக்கியமாக முன்பு சொல்லப்பட்ட புற்றுநோய்கள் வரக்கூடிய சாத்தியம் அதிகம் என்பதாகும்.

இது பெண்களில் செய்யப்பட்டது.

ஆண்களிலும் 25 வயதிற்கு மேற்பட்ட இள வயதுள்ளவர்களிலும் செய்யப்பட்ட இன்னுமொரு ஆய்வும் அதீத எடைக்கும் சிலவகைப் புற்றுநோய்களுக்கும் இடையே தொடர்புள்ளதை எடுத்துக் காட்டுகிறது.

எனவே எடையை அவதானியுங்கள்.

பிற்காலத்தில் வரக் கூடிய புற்றுநோய்க்காக மட்டுமல்ல மிகவிரைவில் வந்து உங்கள் வாழ்வின் எல்லையைக் குறுக்கப்போகிற நீரிழிவு, பிரஸர், மாரடைப்பு போன்றவற்றைத் தடுப்பதற்காகவுமே.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

ஆதாரம்:- Journal Watch General Medicine December 6, 2007

நன்றி:- தினக்குரல்

கார்ட்டூன் நகைச்சுவைகள்


வர வர மனுசங்கள பார்த்து ஓவராத்தான் கெட்டு போயிட்டாங்க..






பார்க்க கூடாத கோணத்தில் நடிகைகள்




நடிகைகளை
எந்த கோணத்தில் பார்க்க வேண்டும் என்று ஒரு வரைமுறை உள்ளது. நமீதா மாதிரி
கும்மென்று இருந்தால் தான் நடிகைகளை ரசிகர்களுக்கு பிடிக்கும். ஆனால்
மேற்கத்திய நடிகைகள் உடல் மெலிவிற்காக பட்டினி கிடக்கிறார்கள். இவர்கள்
பட்டினி கிடப்பதால் எப்படி இருப்பார்கள் என்பதற்கு ஒரு சாம்பிள்
புகைப்படங்கள்

கை குழந்தை இருக்கும் வீட்டில்

உங்கள் வீட்டில் கை குழந்தை இருந்தால் கட்டாயம் உங்கள் வீட்டில் இந்த மருந்துகள் எல்லாம் இருக்க வேண்டும்.


காய்ச்சலுக்கு க்ரோசின் ட்ராப்ஸ் அல்லது சிரப் இந்த மருந்தை காது வலிக்கும் கொடுக்கலாம்.
தடுப்பூசி போட்ட பின்பும் வலியில் குழந்தை அழதாலும் இந்த மருந்து கொடுக்கலாம்.

வயிற்று வலிக்கு கோலிமெக்ஸ் ட்ராப்ஸ் நல்லது

சளி, இருமலுக்கு கான்தஸ் (contus droups)
2 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு தான் விக்ஸ் தடவ வேண்டும்.

வாந்திக்கு டோமஸ்டால் மாத்திரை.

மூக்கு அடைப்புக்கு நாசிவியான் ட்ராப் (nasivion drops)



இது தவிர வீட்டில் பேண்ட்டேஜ், காட்டன், டெட்டால், சோப்ராமிசன் ஆயில்மெண்ட் அல்லது ஏதாவது ஆண்டிசெப்டிக் கிரீம் இருப்பது அவசியம்.

திடீர் என்று ஏற்ப்படும் தீகாயம், வெட்டுகாயம் போன்றவை ஏற்பட்டால் இதனை பயன்படுத்தலாம்.

குழந்தைகளின் துணிகளை அலச சன்லைட் சோப்பு பயன்படுத்தலாம்.

இந்த
மருந்துகள் எல்லாம் நிறைய மருத்துவர்கள் குழந்தைகளுக்கு கொடுக்க சொல்லும்
மருந்துகள் தான். இருந்தாலும் உங்கள் மருத்துவரின் ஆலோசனைக்கு பின்பு இந்த
மருந்துகளை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கவும்.

மருந்து கொடுக்கும் முன்பு காலாவதி தேதியினை பார்த்த பின்பு மருந்துகளை கொடுக்கவும்

Drivers Blackberry

Driver Old Series 5xxx,6xxx,7xxx Drivers
driver BlackBerry
5790,5810,5820,6210,6220,6230,6280,6510,6710,6720,6750,7210
7220,7230,7250,7270,7280,7290,7510,7520,7730,7750,7780,7100t
7105t,7100r,7100v,7100g,7100x,7100i,7130e,7130c,7130g,7130v
Download
http://rapidshare.com/files/174938169/BlackBerryLoggerDriverInstaller_free-gsm-unlock.blogspot.com.rar

Saturday, February 13, 2010

Harris Jayaraj COPY CAT Collection







File: MP3/AVI
Size: 60 MB
Music Director: HJ
Movies: Various
Copied by: AR Rahman/English Artists


Tracking List:





Listen carefully to June Pona - Copy!!






Code:
http://www.easy-share.com/1908675798/Copy_Cat_Harris_Jeyaraj_Secrets.rar
-------------------------------------------------- இனி உங்கள் வலைப்பதிவில் எழுத்துக்களை செலக்ட் செய்வதினை மட்டும் தடுக்க விரும்பினால் கீழுள்ள கோட்களை சேர்க்கவும். -----------------------------------------------------------------